எங்கள் வரலாறு, தரிசனம் மற்றும் நோக்கம்
போதகர்
நான் பாஸ்டர் சாமுவேல் ஆசிர்வாதம். இந்த சபையின் போதகராக ஊழியம் செய்து வருகிறேன். எல்லா ஊழியங்களும் தேவனால் ஏற்படுத்தப்பட்டவை; அவற்றை தேவனே நடத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இந்த ஊழியம் 06 மார்ச் 2016 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஏர்வாடி ஏஜி சபையின் போதகராக இருந்த Rev. Y. ஐசக் அருள்ராஜ் அவர்களால் இது தொடங்கி வைக்கப்பட்டது. அவர் என் தாய்மாமா ஆவர். அவரிடம் மூன்று ஆண்டுகள் உதவி ஊழியராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது.
இந்த ஊழியத்தின் பின்னால் ஒரு விசேஷமான சாட்சி உள்ளது. என் தாயார் திருமதி மரியாள் டேவிட் அவர்கள் சிறு வயதில், இயேசு யார் என்பதே தெரியாத காலத்தில், தேவன் ஒரு தரிசனம் அளித்தார். அந்த தரிசனத்தில், இன்று சபை இயங்கி வரும் அதே ஸ்தலத்தில் பிசாசுப் பிடியிலிருந்தவர்களை விடுதலை செய்யப்படுவதை அவர்கள் கண்டார்கள்.
சிறு வயதில் காணப்படும் சொப்பனங்களும் தரிசனங்களும் பல நேரங்களில் மறந்து போகலாம். ஆனால் அந்த ஒரு தரிசனம் அவர்களுக்கு ஒருபோதும் மறக்கப்படவில்லை. காலங்கள் கடந்தன. இன்று சபை இயங்கி வரும் ஸ்தலம், அவர்கள் தரிசனம் கண்ட அதே இடமாகும். அந்த இடம் முன்பு அவர்கள் வாழ்ந்த தோட்டமும், அவர்களது தகப்பன் வீடும் ஆகும். இன்று அது எல்லாருக்குமான தகப்பன் வீடாக, "பெத்தேல் எழுப்புதல் சபை"யாக மாறியுள்ளது.
தேவனுடைய அநாதி தீர்மானமும் அவருடைய திட்டமும் மட்டுமே நிறைவேறும் என்பதற்கு இந்த சபையும் இந்த ஊழியமும் சாட்சியாக நிற்கின்றன. தலைமுறைகளைத் தாண்டியும் தமது திட்டங்களையும் தரிசனங்களையும் நிறைவேற்றும் தேவன் மகிமைக்குரியவர்.
எங்கள் தரிசனம், இயேசு கிறிஸ்துவின் அன்பை சமூகத்துக்கு கொண்டு சென்று, தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சபையில் ஆவிக்குரிய புதுப்பிப்பை ஏற்படுத்துவது.
எங்கள் பணி, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்து, ஆராதனை, போதனை, ஐக்கியம் மற்றும் ஜெபத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்வது.
பைபிள் தேவனுடைய ஏவப்பட்ட வார்த்தை என்றும் எங்கள் அனைத்து நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கான அடித்தளம் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் அனைத்து வழிபாடு மற்றும் ஊழிய நடவடிக்கைகளில் பரிசுத்த ஆவியானவரின் இருப்பையும் வல்லமையையும் நாங்கள் தேடுகிறோம்.
எங்கள் சமூகத்திற்கும் தேவைப்படுபவர்களுக்கும் இரக்கமுள்ள சேவை மூலம் கிறிஸ்துவின் அன்பை நிரூபிக்கிறோம்.
விசுவாசிகளிடையே உண்மையான ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் நாங்கள் மதிக்கிறோம், விசுவாசத்தில் ஒருவருக்கொருவர் ஆதரிக்கிறோம்.
சுவிசேஷத்தை பகிர்வதற்கும் இரட்சிப்பின் செய்தியுடன் தொலைந்து போனவர்களை சென்றடைவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
பைபிள் படிப்பு, ஜெபம் மற்றும் சீஷத்துவம் மூலம் தொடர்ச்சியான ஆவிக்குரிய வளர்ச்சியை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.